சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி சேர்க்கை தேதி நீட்டிப்பு

சிவகங்கை, ஜூலை 20: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி சேர்க்கை தேதி நீடிக்கப்பட்டுள்ளது என மண்டல இணைப்பதிவாளர்கோ.ராஜேந்திரபிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சி காலம் 1 ஆண்டு. இப்பயிற்சி 2 பருவங்களை கொண்டது.

10, 12ம் வகுப்பு, பட்டயம் மற்றும் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். www.tncu.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.100 இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்:31.07.2024. பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதுடன் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை மேலாண்மை நிலையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் ரூ.18,750யை இணையதள வழியாக மேலாண்மை நிலையத்தில் உள்ள (paytm) மூலம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், திருப்பத்தூர் சாலை, காஞ்சிரங்காலில் செயல்படும் கூட்டுறவு மேலானர்மை நிலையத்தை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04575-243995, 9796750554 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி