சிவகங்கையில் அடித்து கொட்டிய ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ‘குஷி’

 

சிவகங்கை, ஜூலை 6: சிவகங்கையில் நேற்று அடித்து கொட்டிய ஆலங்கட்டி மழையால் வெப்பம் தணிந்தது. வீடுகளில் விழுந்த ஆலங்கட்டியை பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். சிவகங்கையில் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், மாலை சுமார் 5 மணி அளவில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சிவகங்கை நகர் பகுதிகளில் மழைநீர் சாலையில் ஆர்ப்பரித்து ஓடியது.

இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. வீடுகளில் விழுந்த ஆலங்கட்டியினை சிறுவர்கள் உட்பட அனைவரும் கையில் எடுத்து பார்வையிட்டு குதூகலித்தனர். மேலும் ஆலங்கட்டியை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டியை கண்ட மகிழ்ச்சியில் குதூகலமானோம், என்றனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்