Wednesday, July 3, 2024
Home » சிறை விதிகளில் திருத்தம் வேண்டும்: வெப்சைட்டில் பரிந்துரை வெளியிட உத்தரவு

சிறை விதிகளில் திருத்தம் வேண்டும்: வெப்சைட்டில் பரிந்துரை வெளியிட உத்தரவு

by kannappan

மதுரை: தமிழக சிறைகளில் அலுவல் சாரா பார்வையாளர்களாக உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: அவ்வப்போது ஆய்வு செய்து, ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கிடும் வகையில் அனைத்து சிறைகளிலும் பார்வையாளர் குழுவை அமைக்க வேண்டும். அலுவல் சாரா பார்வையாளர் கூட்ட தீர்மானம், அரசுக்கான பரிந்துரைகளை மாவட்ட மற்றும் மாநில சிறை வெப்சைட்டில் வெளியிட வேண்டும். மாதிரி சிறை விதிகள் 2016 மற்றும் ஐநாவின் மண்டேலா விதிகளின்படி சிறை விதிகள் 1894 மற்றும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குழுவின் பரிந்துரை, நடவடிக்கை குறித்த ஆண்டறிக்கையை ஐஜி தரப்பில் தயாரித்து வெப்சைட்டில் வெளியிட வேண்டும். பார்வையாளர் முறை சிறப்பாக செயல்படும் வகையில் மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல்படி அனைத்து தரப்பினரையும் கொண்டு ஆண்டு மாநாட்டை அரசு தரப்பில் நடத்த வேண்டும்….

You may also like

Leave a Comment

seven − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi