சென்னை: சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கோவை மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்ட பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். சிறுவாணி அணையில் இருந்து ஆண்டுதோறும் 1.30 டி.எம்.சி.க்கு மிகாமல் வழங்க இரு மாநில அரசுகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். …