சிறுவனை ஓடஓட விரட்டி தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரி,பிப். 18: புதுச்சேரி உருளையன்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் செல்வி (45). இவரது 15 வயது மதிக்கத்தக்க மகன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கத்தி, தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென அங்கு வந்த 15 பேர் கும்பல், சிறுவனை கடத்த முயன்றுள்ளது. அவன் அக்கும்பலிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடிய நிலையில், தெருவில் ஓடஓட விரட்டிய கும்பல் சிறுவனை நடுரோட்டில் மடக்கி ஆபாசமாக திட்டியதோடு, கத்தி, தடியால் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் சிறுவன் காயமடைந்த நிலையில் உடனே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற சிறுவன், நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறுவன் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது தாயார் செல்வி, உருளையன்பேட்டை போலீசில் முறையிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே சிறுவனை ஓட ஓட விரட்டி 15 பேர் கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

நாளை சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம்: மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டுகோள்

பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து அமைச்சர் கள ஆய்வு