தொண்டி: தொண்டி அருகே சிறுவனின் தாடை பகுதியில் பிரஸ் மாட்டிக் கொண்டதை சாதுர்யமாக எடுத்த டாக்டரை பொதுமக்கள் பாராட்டினர். தொண்டி அருகே குணவதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் நேற்று முன்தினம் பல் துலக்கும் போது தடுமாறி கீழே விழுந்துள்ளான். அப்போது வாயின் தாடை பகுதியில் பிரஸ் குத்தி உள்ளே சென்று விட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் கதறிய சிறுவனை, நம்புதாளை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சாதுர்யமாக செயல்பட்ட டாக்டர் ஜெயராஜ் பாண்டியன், ஆபரேசன் இல்லாமல் பிரஸ்சை வெளியே எடுத்தார். இவரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.