சிறுமுகை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த விவசாயி பலி

 

மேட்டுப்பாளையம், ஆக.2: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை பள்ளேபாளையத்தை சேர்ந்தவர் மாகாளி(45). இவர் நேற்று பள்ளேபாளையத்தில் உள்ள பொன்னா கவுண்டர் தோட்டத்தில் வாழைக்காய் வெட்டுவதற்காக சென்று வெட்டி விட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது, அந்த தோட்டத்தில் உள்ள சுமார் 15 அடி ஆழமுள்ள பெரிய தொட்டியில் கேன் மூலம் தண்ணீர் எடுக்க முயன்ற போது மாகாளி தவறி தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று பலியான மாகாளியின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து சிறுமுகை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை