திருச்சி, மே 4: திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு வயிற்று வலி பிரச்சனையால் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.இந்நிலையில் அவரை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். பாிசோதனையில் சிறுமி கருவுற்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பொன்மலை போலீசில் புகார் அளித்தனர். வழக்கு பதிந்து ேபாலீசார் மேற்கொண்ட விசாரணையில் பொன்மலைபட்டியைச் சேர்ந்த வாலிபர் (23) ஒருவர் காதலிப்பதாக கூறி அவரை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கியதும், மேலும் வாலிபரின் நண்பர்களும் அவ்வப்போது சிறுமியை பாலியல் தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ேபாலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.