விருதுநகர், மே 13: விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்தவர் சக்திமுருகன்(20). இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து ஒருவருடமாக குடும்பம் நடத்தி உள்ளார். குழந்தை இல்லாத நிலையில் கடந்த 10ம் தேதி கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி 181க்கு போன் செய்து தனது பிரச்சனையை தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சிறுமியை திருமணம் செய்திருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகாரின் பேரில் கணவன் சக்திமுருகன்(20), மாமனார் வேல்முருகன்(41), மாமியார் முத்துமாரி(40), சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.