சிறுமி கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில், திருமண ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ஆவடி அடுத்த அய்யபாக்கம், அஞ்சுகம் நகரில் தம்பதி வசிக்கின்றனர். அவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பெற்றோருக்கு துணையாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர், மகளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. புகாரின்படி திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்தனர். அதில், திருமுல்லைவாயல், அனுமன் நகர், அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த சூர்யா (19) என்ற வாலிபர், சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து இந்த புகார், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.  இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். போலீசார், தங்களை தேடுவதை அறிந்த சூரியா, சிறுமியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.அதில், வாலிபர் சூர்யாவுக்கு, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், அவளை திருமணம் செய்து கொள்வதாக  ஆசை வார்த்தை கூறி திருவண்ணாமலைக்கு கடத்தி சென்றார். அங்கு தனது உறவினர் வீட்டில் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, சூரியாவை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். …

Related posts

சென்னையில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து வங்கதேச இளம்பெண்ணை பாலியலில் தள்ளிய கொடூரம்

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது