Friday, September 20, 2024
Home » சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

by Ranjith

 

கோவை ஆக 28: கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (55). இவரது உறவினர் பேரூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021 ஜனவரி மாதம் 15ம் தேதி பேரூர் பகுதியில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த ஒரு 7 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் இது குறித்து வெளியே கூறக்கூடாது என்று மிரட்டினார். இதனால் அந்த சிறுமி பயத்தில் யாரிடமும் கூறவில்லை. சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாயார், அந்த சிறுமியை அழைத்து விசாரித்தார்.

அப்போது சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து சிறுமி அழுது கொண்டே தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்தோணியை கைது செய்தனர். இது குறித்த வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், தொழிலாளி அந்தோணிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi