பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 38 வயது பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் செய்தார். அதில், எனது 17 வயது மகளை கடந்த 2 நாட்களாக காணவில்லை. அவளை மீட்டு தரவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடினர். இந்நிலையில் சென்னை அடையாரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். விசாரணையில், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த விஷ்வா (20) என்பவர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, அவரை திருமணம் செய்தது தெரிந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு, பெரவள்ளூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தில் விஷ்வாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….