சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது

திருக்கோவிலூர், மார்ச் 28: திருக்கோவிலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அவர் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான உளுந்தூர்பேட்டை தாலுகா கண்ணம்பட்டு கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் ஆனந்தராஜ் (33) என்பவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிறுமி வீட்டுக்கு வந்து சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

மேலும் ஆனந்தராஜு என்பவருக்கும் சிறுமி குடும்பத்திற்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதால் அதனை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து