சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு

நெல்லை, மார்ச் 2: திசையன்விளை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரன் மகன் லெட்சுமணன் (23). இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். தகவலறிந்த ராதாபுரம் தாலுகா சமூக நலத்துறை அலுவலர் சாந்தி விசாரணை நடத்தினார். இதில் லெட்சுமணன் சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதுகுறித்து அவர், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி, குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ வழக்கு பதிந்து லெட்சுமணனை தேடி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு