சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் கைது

 

பழநி, ஆக. 9: பழநி அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று 7 வயது சிறுமியை முட்புதருக்குள் தூக்கி சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் முருகன் தப்பியோடினார். பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து பழநி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முள்புதரில் மயக்கமடைந்து கிடந்த சிறுமியை மீட்டு, பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்