சிறுமியிடம் சில்மிஷம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, ஜன.3: தண்டராம்பட்டு அருகே சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கராஜ்(21), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமணவல்லி விசாரணை நடத்தியதில், தங்கராஜ் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தங்கராஜை நேற்று கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்