சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தேனி, செப். 27: பெரியகுளத்தில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த நாகராஜ்(61) என்பவர் கடந்த 2022ம் ஆண்டு அக்.23ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாகராஜ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல்.விவேகானந்தன் ஆஜரானார்.

இவ்வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று முன் தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில் நாகராஜ் குற்றவாளி என்பதை உறுதி செய்து, நாகராஜூக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 1 வருட காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்