திருப்பூர், ஆக. 8: தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (40), இவர் திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவரது 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.