சிறுமிக்கு பாலியல் தொல்லை: தட்டிக்கேட்ட உறவினர்கள் மீது தாக்குதல்  7 பேர் கைது

 

பெரியபாளையம், ஏப். 27: பெரியபாளையம் அருகே தனியார் செங்கல் சேம்பரில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து ஆரணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் மனோகர் என்பவருக்கு சொந்தமான தனியார் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் குளிச்சலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தனது மனைவி உண்ணாமலை ஆகியோர் செங்கல் சூளையில் கடந்த சில வருடங்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத் தேர்வு முடிந்து விடுமுறை காரணமாக தனது பெற்றோர்களை பார்க்க சிறுமி தனியார் செங்கல் சூளைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே செங்கல் சேம்பரில் பணி புரியும் திருவண்ணாமலை மாவட்டச் சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரின் மகன் பிரவீன்ராஜ்(25) சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது சிறுமி அங்கிருந்து தப்பி சென்று நடந்ததை பெற்றோர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் பிரவீனை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பிரவீன் செங்குன்றம் அடுத்த பூச்சி அத்திப்பேடு பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களை வரவழைத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ஐந்து பேருக்கு பலத்த காயம் ஏற்றப்பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன்ராஜ்(25), கிருஷ்ணன்(25), மணிராஜ்(25), ஜான்பீட்டர்(52), சதிஷ்(37), மூர்த்தி(25), குமார்(25) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஜூலை 5ம் தேதி கடைசி குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்

மகளிர் சுய உதவிக்குழு, குழுக்கூட்டமைப்புகள் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு