சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கண்டக்டருக்கு 7 ஆண்டு சிறை

சிவகங்கை, அக்.10: திருப்பத்தூரில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த அரசு பஸ் கண்டக்டருக்கு 7ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பத்தூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழ்வாணன்(56). அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவர் வீட்டின் அருகிலேயே மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 19.1.2018 அன்று இவரது மளிகைக்கடைக்கு வந்த 6ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்த போலீசார் தமிழ்வாணனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரத்ராஜ் குற்றம்சாட்டப்பட்ட தமிழ்வாணனுக்கு 7ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை