ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தில் 7வயது சிறுமியை அவரது உறவினரான 16வயது சிறுவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த சம்பவத்தை சிறுமி தனது தாயிடம் அழுதபடி கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்….