சிறுமிக்கு ஈவ்டீசிங்; தந்தை, மகன் மீது போக்சோ வழக்கு

தர்மபுரி, செப்.4: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு சென்று வரும் போது, தண்டுக்காரன அள்ளியை சேர்ந்த திருமணமான விஜயகாந்த்(25) என்பவர் கேலி, கிண்டல் செய்து வந்ததோடு, பல்வேறு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு அவரது தந்தை நடராஜன் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதுபற்றி சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தாய் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜயகாந்த், நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

புறவழிச்சாலை அமைக்கக்கோரி ஒன்றிய அமைச்சரிடம் தேனி எம்பி மனு

மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 126 பேர் கைது

தேனி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை