தூத்துக்குடி, செப். 13: தூத்துக்குடியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ஜெசிந்த்(23). இவர், 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி இருமாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர். இதுபோல தருவைகுளம் பகுதியை சேர்ந்தவர் ரெனால்ட்(25). இவர், உறவினரான கல்லூரி மாணவியை தனது நண்பர் வீட்டிற்கு கடந்த 11ம் தேதி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெனால்ட் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு2 வாலிபர் மீது போக்சோ வழக்கு
previous post