Saturday, September 21, 2024
Home » சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் மீது வழக்கு

சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்தவர்கள் மீது வழக்கு

by Ranjith

 

வருசநாடு, ஆக. 12: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கடந்த மாதம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மலர்க்கொடி போலீசில் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் மாப்பிள்ளை உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதேபோல தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, வருசநாடு பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபருடன் ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சமூக நல விரிவாக்க அலுவலர் மலர்கொடி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் மாப்பிள்ளை உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

You may also like

Leave a Comment

13 − ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi