சிறுபாலை நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

இளையான்குடி, ஜூன் 21: இளையான்குடி-சாலைக்கிராமம் சாலையில் உள்ள சிறுபாலை கிராமத்தில் உள்ள நிழற்குடை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நிழற்குடையின் உள்ளே செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுபாலை ராஜா கூறியதாவது, மழை மற்றும் வெயிலுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, புதிய நிழற்குடை அமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு