சிறுதானிய உணவு திருவிழா

தர்மபுரி, செப்.26: தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நேற்று சிறுதானிய உணவு திருவிழாவை கலெக்டர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவில் 3 நாள் நடைபெறும் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கல்லூரி சந்தை, தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று துவங்கியது. கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மகளிர் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த சிறுதானிய உணவு அரங்குகள் மற்றும் கல்லூரி சந்தை அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா மற்றும் அனைத்து உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா