சிறுகளப்பூர் சிறப்பு பொது மருத்துவ முகாம்

 

லால்குடி, ஜூலை 26: லால்குடி அருகே சிறுகளப்பூர் ஊராட்சியில் சிறப்பு பொது மருத்துவ முகாமை சௌந்தர பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம். சிறுகளப்பூர் ஊராட்சியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் சிறுகளப்பூர் ஊராட்சி இணைந்து பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுதாபெரியசாமி, முன்னிலை வைத்தார்.

முகாமை சௌந்தரபாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர். முகாமில் சிறுகளப்பூர் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், காது மூக்கு தொண்டை ,எலும்பியல்,பல் சிகிச்சை போன்ற பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.

Related posts

துரைப்பாக்கம், முகப்பேர் பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் உள்ள 132 பேருந்து நிறுத்தங்களில் பழுதடைந்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு: மாநகராட்சி தகவல்