தர்மபுரி, அக்.19: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், 87 புகார் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம், மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடந்தது. ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 87 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 87 மனுக்கள் மீது உடனை விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. முகாமில் டிஎஸ்பி ராமசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சர்மிளாபானு, பாலகிருஷ்ணன், அன்பழகன், எஸ்ஐகள் விஜயா, இளமதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.