சிறப்பு உதவி ஆய்வாளர்களாக 72 பேர் பதவி உயர்வு

ஈரோடு, ஜூன் 18: ஈரோடு மாவட்டத்தில் தலைமைக்காவலர்களாக பணியாற்றிய 72 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் 25 ஆண்டுகள் போலீசாக பணியாற்றியவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய தலைமைக்காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவிக்கு காத்திருந்தனர். இந்த, பதவி உயர்வு கடந்த ஜூன் 1ம் தேதியே அமலானது. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறையால் பதவி உயர்வு தாமதமானது. தேர்தல் விதிமுறை நிறைவு பெற்ற நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்டிவிசன்களுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தலைமைக்காவலர்களாக பணியாற்றிய 72 பேர், சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Related posts

திரவுபதியம்மன் கோயிலுக்கு சொந்தமான ₹35 லட்சம் மதிப்புள்ள வீடு மீட்பு அறநிலையதுறை அதிகாரிகள் சீல் வைத்தனர் வேலூர் வேலப்பாடியில் நீதிமன்ற உத்தரவின்பேரில்

வரத்து அதிகரிப்பால் பீன்ஸ் விலையில் சரிவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில்

ஐஎப்எஸ் நிதிநிறுவன ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை வேலூரில் நிதி நிறுவன மோசடியால் விரக்தி