சிமெண்ட் மூட்டைகள் சரிந்து கூலித்தொழிலாளி பலி போளூர் தனியார் கடையில்

போளூர், ஜன.3: போளூரில் உள்ள தனியார் கடையில் சிமெண்ட் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வீரப்பன் தெருவில் தனியார் சிமெண்ட் கடை உள்ளது. இங்கு குருவிமலை கிராமத்தை சேர்ந்த குமரேசன்(68) என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் குமரேசன் கடையை திறந்தார். பின்னர், வாடிக்கையாளர் ஒருவருக்கு சிமெண்ட் எடுத்து தர முயன்றார். அப்ேபாது, எதிர்பாராதவிதமாக அனைத்து சிமெண்ட் மூட்டைகளும் சரிந்து விழுந்தன. இதில், சுந்தரேசன் சிக்கிக்கொண்டு எதிரே உள்ள சுவற்றின் மீது மோதி படுகாயம் அடைந்தார். பின்னர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த போளூர் சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த குமரேசனின் மனைவி வளர்மதி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமெண்ட் மூட்டைகள் சரிந்து கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி