Wednesday, July 3, 2024
Home » சிப்ஸ் சாப்பிட்டு, டயட் கோக் குடித்த வாலிபர் மூச்சு திணறி பரிதாப உயிரிழப்பு : பெற்றோர், உறவினர்கள் கதறல்

சிப்ஸ் சாப்பிட்டு, டயட் கோக் குடித்த வாலிபர் மூச்சு திணறி பரிதாப உயிரிழப்பு : பெற்றோர், உறவினர்கள் கதறல்

by kannappan

துரைப்பாக்கம்: வேளச்சேரியை சேர்ந்தவர் பாலாஜி மகன் சதீஷ் (25). சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு அக்கரை கடற்கரையில் வெகு நேரம் இறகு பந்து விளையாடியுள்ளனர். உடல் சோர்வானதால் நண்பர்களுடன் அங்குள்ள கடையில் சிப்ஸ், டயட் கோக் வாங்கியுள்ளனர். பின்னர் கடற்கரையில் அமர்ந்து சிப்சை சாப்பிட்டு கொண்டே குளிர்பானத்தை குடித்துள்ளார். அப்போது லேசாக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே பனையூரில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். திடீரென மூச்சு திணறல் அதிகமாகவே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் நிலை ஆபத்தாக இருப்பது தெரிந்ததால் பெரும்பாக்கதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கானத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தந்தை பாலாஜி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிக நேரம் விளையாடியபோது ஏற்பட்ட சோர்வு காரணமாக சிப்ஸ் சாப்பிட்டவுடன் வாயு அதிகமுள்ள குளிர்பானம் குடித்ததால் ஏற்பட்ட உணவு மாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கடந்தாண்டு கர்நாடக சூப்பர் ஸ்டார் நடிகர் புனித்ராஜ் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதே போன்று சதீஷும் கட்டுடல் கொண்டவர். அப்படிப்பட்டவர் இறந்த சம்பவம் நண்பர்கள், பெற்றோர், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   …

You may also like

Leave a Comment

nineteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi