சின்னாளபட்டி அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

நிலக்கோட்டை, ஜூலை 2: சின்னாளபட்டியை அடுத்த போக்குவரத்து நகர் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (35). இவர் சின்னாளபட்டியில் இயங்கி வரும் கம்பெனியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்து டூவீலரில், சின்னாளபட்டியில் இருந்து போக்குவரத்து நகர் நோக்கி சென்றார். அப்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ், இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்