விருதுநகர், ஜூலை 21: விருதுநகர் அருகே உள்ளது சின்னமூப்பன்பட்டி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான தார் சாலையிலிருந்து ஊருக்குள் வரும் இடத்தில் கழிவு நீர் வாறுகால் உள்ளது. அதன் மேற்பகுதியில் போடப்பட்டிருந்த கான்கிரீட் மூடி சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, விபத்து ஏதும் நடைபெறும் முன், சேதமடைந்துள்ள கழிவு நீர் வாறுகால் மூடியை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிய மூடியை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.