சின்னசேலம் அருகே வயல்வெளியில் சாய்ந்த நிலையில் மின்கம்பம்-உயிர் பலி ஏற்படும் அபாயம்

சின்னசேலம் :   சின்னசேலம் அருகே வயல்வெளியில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா பகுதியில் வயல்வெளி நடுவில் ஓரிரு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பங்கள் வயல்வெளியில் உள்ளதால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் பூமி நெகிழ்ந்து சாய்ந்து விடுகிறது. அதைப்போல சின்னசேலத்தில் இருந்து செல்லியம்மன் கோயில் வழியாக தோட்டப்பாடி செல்லும் வழியில் ஏரிக்கு மேற்கே ராசேந்திரன் என்பவரது வயலில் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த கம்பம் கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்தால் மின்சாரம் செல்லும் கம்பி கீழே சாய்ந்து பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் உயிர் பலி சேதம் ஏற்படும். எனவே இப்பகுதி மக்களின் நலன்கருதி மின்வாரிய அதிகாரிகள் அந்த கம்பத்தை நிமிர்த்தி நடுவதற்கு முன்வர வேண்டும். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய உயர் அதிகாரிகள் சாய்ந்த நிலையில் உள்ள கம்பத்தை சரிசெய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்….

Related posts

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை தண்டையார்பேட்டையில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய புகாரில் மாவட்ட செயலாளர் கைது..!!

கலப்பு திருமணம்: சென்னை தியாகராயர் நகரில் பெண்ணை கிண்டல் செய்ததாக புகார்