சின்டெக்ஸ் டேங்க் திருடிய 2பேர் கைது

தர்மபுரி, ஜூன் 21: அரூர் எஸ்ஐ தர்மன் மற்றும் போலீசார், கே.வேப்பனப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அந்த வாகனத்தை சோதனையிட்டனர்.

அதில் சின்டெக்ஸ் டேங்க் இருந்தது. விசாரணையில் அரூர் எஸ்.பட்டி பாரதிபுரத்தில் உள்ள பொது கழிவறையில் வைத்திருந்த சின்டெக்ஸ் டேங்கை, அவர்கள் திருடிக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் அந்த டேங்கை பறிமுதல் செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட அரூர் எஸ்.பட்டியை சேர்ந்த குப்புராஜ்(35), இளவரசன்(28) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு