Tuesday, July 2, 2024
Home » சினிமா தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு எதிரொலி ரூ.5 கோடி மோசடி புகாருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: கமிஷனர் ஆபிசில் நடிகர் விமல் பரபரப்பு புகார்

சினிமா தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு எதிரொலி ரூ.5 கோடி மோசடி புகாருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: கமிஷனர் ஆபிசில் நடிகர் விமல் பரபரப்பு புகார்

by kannappan

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சாலிகிராமம் கண்ணபிரான் காலனியை சேர்ந்த நடிகர் விமல் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்தேன். பண பிரச்னை காரணமாக அந்த படத்தை எனது ஏ3வி சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன். இந்த படத்தை முதலில் தயாரித்தது கணேஷ் என்பவர். அவரால் படத்தை தயாரிக்க முடியவில்லை என்பதால் அவர் விலகிவிட்டார். பிறகு சிங்காரவேலன் என்னை தயாரிப்பாளராக கூறி பைனான்சியர் கோபி என்பவரை அறிமுகம் செய்து அவர் மூலம் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்தனர். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன். இந்நிலையில் படத்தை தயாரிக்க ரூ.3 கோடி செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் ரூ.4 கோடி கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த ரூ.4 கோடி பணமும் படத்திற்காக கடனாக வாங்கிய ரூ.3 கோடி பணத்திற்கான வட்டிக்காக செலவாகி விட்டதாக சிங்காரவேலன் தெரிவித்தார்.  அசல் ரூ.3 கோடி பணத்துக்காக எதிர் வரும் காலத்தில் படங்கள் நடித்து சம்பளத்தின் மூலம் கொடுத்தேன். இதனிடையே மன்னர் வகையறா படத்தை விற்பனை செய்ததில் ரூ.8 கோடி கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்து விட்டார்.  மேலும் தன் தயாரிப்தயாரிப்பாளர் சிங்காரவேலன் செய்த மோசடிக்கு எனது பெயரை பயன்படுத்தியுள்ளார். அதற்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ், கண்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2021ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிங்காரவேலன் உட்பட பலர் இந்த வழக்கில் நீதிமன்றதில் முன்ஜாமீன் ெபற்றுள்ளனர். வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சிங்காரவேலன் களவாணி-2 படத்திற்கு எதிராக பொய் புகார் கொடுத்துள்ளார். அதேபோல் ‘விலங்கு’ படத்தின் இயக்குனரிடம் என்னை பற்றி தவறாக கூறியுள்ளார்.  எனவே என்னிடம் பெற்ற வங்கி காசோலைகள் மற்றும் ஆவணங்களை வைத்து தவறாக பயன்படுத்த கூடாது, இது சட்டப்படி குற்றமாகும். எனவே என் மீது பொய் புகார் அளித்து எனது பெயரை கெடுக்கும் கோபி, சிங்காரவேலன், திருநாவுக்கரசு, விக்னேஷ், சிவா, வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

four + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi