Monday, July 1, 2024
Home » சிந்தாமணிப்பட்டி அருகே இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் வெடி, வெடித்ததில் 3 பேர் தீக்காயம்

சிந்தாமணிப்பட்டி அருகே இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் வெடி, வெடித்ததில் 3 பேர் தீக்காயம்

by Suresh

தோகைமலை, ஆக. 31: தரகம்பட்டி அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய சென்றபோது வெடி, வெடித்ததில் 3 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே சிந்தாமணிப்பட்டி காவல்சரகம் மேலப்பகுதி ஊராட்சி விராலிப்பட்டி மாரியப்பன் மனைவி பாலம்மாள் (45). இவர் நேற்றுமுன்தினம் இறந்ததால் இவரின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச்சென்று உள்ளனர்.
அப்போது ஒரு மூட்டையில் பல்வேறு வெடிகளை வைத்துக்கொண்டு வெடித்தபடியே சென்றுள்ளனர்.

இதில் வெடியின் தீ பொறியானது வெடிகள் வைத்திருந்த மூட்டையில் விழுந்துள்ளது. இதனால் மூட்டையில் வைத்திருந்த வெடிகள் வெடித்து சிதறியது. இதில் அருகில் இருந்த நாச்சார்ப்பட்டியை சேந்த 2 பேர் உள்பட 3 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்தவர்கள் வெடிகள் வைத்து இருந்த மூட்டையில் தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டனர். ஆனால், வெடிகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வெடித்ததால் அங்கிருந்தவர்கள் உயிருக்கு பயந்து சிதறி ஓடினர்.

பின்னர் வெடியில் சிக்கி தீக்காயம் அடைந்த 3 பேரை மீட்டு மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi