சிந்தனூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை

பெங்களூரு: ரெய்ச்சூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து சிந்தனூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ரெய்ச்சூர் மக்களவை தொகுதி முன்னாள் பாஜ உறுப்பினர் கே.விருபாட்சப்பா தலைமையிலான குழுவினர் பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து ெகாடுத்த மனுவில், மாநிலத்தின் கல்யாண கர்நாடக பகுதியில் இருக்கும் ரெய்ச்சூர் மாவட்டம் பின்தங்கியுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் ெகாண்டு நிர்வாக வசதிக்காக சிந்தனூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். சிந்தனூரில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் தலா இரண்டு உள்ளது. கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள் என மாவட்ட தலைநகரங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளது. புதியதாக உருவாகும் மாவட்டத்தில் மஸ்கி, சிருகுப்பா, காரடகி, கனககிரி ஆகிய தாலுகாகளை சேர்க்க வேண்டும் என்று ேகாரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பீகார் சிவான் மாவட்டத்தில் கண்டகி நதியில் கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்து

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!