சித்ரா பவுர்ணமி பாதுகாப்புக்கு வேலூர் போலீசார் 350 பேர் பயணம்

வேலூர், மே 4: திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி பாதுகாப்பு பணிக்கு வேலூர் மாவட்ட போலீசார் 350 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர்.திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் கிரிவலத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் மக்கள் வருவர்கள். இவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ், ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவு முதல் சித்ரா பவுர்ணமியன்று லட்சத்துக்கானவர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள் என்பதால் அம்மாவட்ட போலீசார் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் உட்பட 350 போலீசார் நேற்று வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் இருந்து காவல்துறை வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை