சித்தூர் அருகே லாரியை வழிமறித்து டிரைவர் வெட்டிக்கொலை

திருமலை: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் லோகநாதன் (40), லாரி டிரைவர். இவர் தினமும் வேலூர் மாவட்டத்தில் சேகரிக்கும் பாலை ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சமுத்திரப்பள்ளியில் உள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு லாரியில் கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினமும் தேவராஜ், பால் ஏற்றிக்கொண்டு பால் நிறுவனத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 10 மணியளவில் வேலூர் நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, பலமனேர் மண்டலம் கோதிகுட்ட என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த ஒரு கார், லாரியை திடீரென வழிமறித்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த லோகநாதன் விபத்து ஏற்படாதவாறு உடனடியாக பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார். அப்போது, காரில் இருந்து கத்திகளுடன் இறங்கிய மர்ம கும்பல், லோகநாதனை சரமாரி வெட்டியது. லோகநாதனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு மர்ம கும்பல் காரில் தப்பியது. இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய லோகநாதனை மீட்டு பலமனேர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பலமனேர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதனை கொலை செய்த கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்….

Related posts

வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது: 28 மாத்திரைகள் பறிமுதல்

‘மனைவிக்கு உடல்நலம் சரியில்லையாம்’ 1 மாதத்தில் திருப்பி தந்து விடுவதாக கடிதம் எழுதி வைத்து கொள்ளை: தூத்துக்குடியில் சுவாரசியம்

அறந்தாங்கி அருகே மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவி செயற்பொறியாளர் கைது