சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து 20, 21ம் தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:  கடலூர்  மாவட்டம் சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள  தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23  மற்றும் 33ன் படி ஆணையாரால் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவிடம், கோயில்   நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை  தெரிவிக்கலாம். வருகிற 20 மற்றும் 21ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3  மணி வரை துணை ஆணையர்/ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு,  இணை ஆணையர்  அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம்,  கடலூர்-607001 என்ற அஞ்சல் முகவரியில் நேரில் சென்று கருத்துக்களை  தெரிவிக்கலாம். vocud.hrce@tn.gov.in  என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் 21ம்  தேதி மாலை 3 மணிக்குள் அனுப்பலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்