சிட்பண்ட் ஊழியருக்கு வெட்டு: 2 ரவுடிகள் உள்பட 3 பேர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம் ஈஸ்வர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (34). தனியார் சிட்பண்ட் நிறுவன ஊழியர். இந்நிலையில் நேற்றுமுன் தினம் இரவு வினோத்குமார் தனது இரு நண்பர்களுடன் வீராபுரம் சமுதாயக்கூடம் அருகில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மோரை வேணுகோபால் நகரை சேர்ந்த ரவிசங்கர் (21). அதேபகுதி புதிய கன்னியம்மன் நகரை சேர்ந்த ஆனந்தரான் (22). இருவரும் ரவுடிகள். மற்றும் கணேசன் (19) ஆகியோர் அங்கு வந்தனர். 3 பேரும் சேர்ந்து வினோத்குமாரிடம் மதுகேட்டுள்ளனர். ஆனால் வினோத் தர மறுத்துள்ளார். எனவே ரவுடி ரவி சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினோத்குமாரின் இடதுகையில் வெட்டியுள்ளான். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த வினோத்குமாரை நண்பர்கள் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் வழக்கு பதிவுசெய்து  3 பேரையும் நேற்று கைது செய்தனர்….

Related posts

63 வயது மனைவியை குத்தி கொன்ற 72 வயது கணவர்

12 டூவீலர்களை திருடிய ‘கோடீஸ்வரர்’ கைது: பல கோடி சொத்துக்கு அதிபதி

தாயுடன் கள்ளத்தொடர்பு; விவசாயி கொன்று வீச்சு: வாலிபர் கைது