சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 30 ஆயிரம் பேருக்கு திமுக உறுப்பினர் கார்டு

 

கோவை, செப். 13: கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுக பவளவிழா ஆண்டை முன்னிட்டு, கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், உறுப்பினர் அட்டை மற்றும் இனிப்பு வழங்கினார்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு பகுதி கழகம்-1, பீளமேடு பகுதி கழகம்-2, பீளமேடு பகுதி கழகம்-3, சிங்காநல்லூர் பகுதி கழகம்-1, சிங்காநல்லூர் பகுதி கழகம்-2, சிங்காநல்லூர் பகுதி கழகம்-3 ஆகிய பகுதிகளில் மொத்தம் 30 ஆயிரம் பேருக்கு இன்று ஒரே நாளில் உறுப்பினர் அட்டை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் பா.ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், ச.கார்த்திகேயன், சங்கனூர் ஆனந்தகுமார், தங்கம் சந்திரசேகர், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதி கழக செயலாளர்கள் ஆர்.எம்.சேதுராமன், துரை.செந்தமிழ்செல்வன், மா.நாகராஜ், இரா.சேரலாதன், வார்டு செயலாளர்கள் கி.நாராயணன், கே.ஆனந்தகுமார், சிங்கை அன்பு, சுரேஷ் குமார், தி.இளங்கோவன், அமானுல்லா, ஏ.எஸ்.நடராஜ், ஆ.மாடசாமி, ப.மோகன்ராஜ், க.மணிகண்டன், எல்.பி.எப்.சண்முகம், கே.ராமநாதன், டவுன் ஆனந்த், அணிகளின் அமைப்பாளர்கள் டெம்போ சிவா, கராத்தே அர்ஜூனன், தி.கண்ணன், ஆர்.எஸ்.புரம் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்