சாலை விபத்தில் 2 வாலிபர் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் புவனேஷ்(24), விஜயன்(25). இருவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று மதியம் செங்குன்றம் செல்வதற்காக, பைக்கில் சென்றனர். அப்போது, செங்குன்றம் அடுத்த சிவந்தி ஆதித்தன் நகர் திருவள்ளூர் நெடுஞ்சாலை அருகே செங்குன்றம் நோக்கிச் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது மாடுகள் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இதை பார்த்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.  தகவலறிந்த, சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக, வழக்கு பதிந்து,  தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்….

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்