சாலை விபத்தில் மாணவர் பலி: நண்பர் படுகாயம்

பெரியகுளம், செப். 28: பெரியகுளத்தில் வேகமாகச் சென்ற டூவீலர் மைல் கல்லில் மோதிய விபத்தில் மாணவர் உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து வடகரை போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சையது ஜெயலானி. இவரது மகன் சையது முகமது (15). இவரது நண்பர் முனிராஜ் மகன் முகுந்தன் (15). இருவரும் தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் மாலை டூவீலரில் நகரில் உள்ள கல்லாறு சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோரம் இருந்த மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயம் அடைந்த சையது முகமது சம்பவ இடத்திலேயே இறந்தார். முகுந்தன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த பெரியகுளம் வடகரை போலீசார் சையது முகமது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காகவும், முகுந்தனை சிகிச்சைக்காகவும் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்