சாலை விபத்தில் பெயிண்டர் பலி

 

பழநி, செப்.11: பழநியில் டூவீலர்கள் மோதிக்கொண்டதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழநி டவுன், தோட்டக்காரர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (23). பெயிண்டர். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது நண்பரான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மணிவண்ணன் (17) என்பவருடன் பைக்கில் பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ராஜாஜி சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே, கோவிந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் கோவிந்தராஜ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்