சாலை விபத்தில் படுகாயம் தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை, மார்ச் 7: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம், ராதாபுரம் வட்டம், பணகுடி பகுதி-2 கிராமம், பணகுடி தூய்மைப் பணியாளர் குடியிருப்பில் வசித்து வரும் வசந்தி (38) என்பவர் ஈஸ்ட் விசன் சேரிடபிள் டிரஸ்ட் நிறுவனம் மூலம் பணகுடி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருபவர். கடந்த பிப்.29ம் தேதி பிற்பகல் பணகுடி புறவழிச்சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக நான்கு சக்கர வாகனம் மோதிய விபத்தில், இரண்டு கால்கள் மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மேலும், சிகிச்சை பெற்றுவரும் வசந்தியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை