சாலை விபத்தில் டிரைவர் சாவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது. நேற்று மதியம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி(48), தொழிற்சாலைக்கு சிலிண்டர் லாரியுடன் வந்துள்ளார். எரிவாயு சிலிண்டர் நீரப்ப கால தாமதம் ஏற்படும் நிலையில் அருகே ஒருவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கும்மிடிப்பூண்டி, பைபாஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திவிட்டு புது கும்மிடிப்பூண்டி வழியாக வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கம்பி ஒன்றில்  மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கழுத்து கிழிக்கப்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த சிப்காட் போலீசார் அங்கு வந்து அவரின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்