கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது. நேற்று மதியம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி(48), தொழிற்சாலைக்கு சிலிண்டர் லாரியுடன் வந்துள்ளார். எரிவாயு சிலிண்டர் நீரப்ப கால தாமதம் ஏற்படும் நிலையில் அருகே ஒருவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கும்மிடிப்பூண்டி, பைபாஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். மது அருந்திவிட்டு புது கும்மிடிப்பூண்டி வழியாக வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கம்பி ஒன்றில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கழுத்து கிழிக்கப்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த சிப்காட் போலீசார் அங்கு வந்து அவரின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….
சாலை விபத்தில் டிரைவர் சாவு
previous post