சாலை வளைவில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கிழ்முதலம்பேடு பகுதியில் ஷேர் ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 5  பெண்கள் படுகாயமடைந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த கிழ்முதலம்பேடு ஊராட்சி சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், டெல்லி மற்றும் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, செங்குன்றம், சென்னை, ஆரம்பாக்கம்  பகுதிகளில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவது வழக்கம்.  இந்நிலையில் புதுவாயில் இருந்து சென்னை நோக்கி வந்த ஷேர்ஆட்டோ 5 பெண்களை ஏற்றிக்கொண்டு கிழ்முதலம்பேடு ஊராட்சி வந்து கொண்டிருந்தது. அப்போது மேம்பாலம் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருப்பும் முனையில் திடீரென ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் 5 பெண்கள் காயமடைந்தனர். அவர்களை சக வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். …

Related posts

பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் TN-Alert கைப்பேசி செயலியினை வெளியிட்டார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள போர் விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு களஆய்வு மேற்கொண்டார்!

பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடுகள்; சிறையில் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு வசதிகள் தரப்படவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி